Published : 29 Nov 2014 10:05 AM
Last Updated : 29 Nov 2014 10:05 AM
விழுப்புரம் யார்டில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் சில பாசஞ்சர் ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்படவுள்ளது என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
விழுப்புரம் வழித்தடத்தில் சில பாசஞ்சர் ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்படவுள்ளது. இந்த மாற்றங்கள் டிசம்பர் 1, 4, 5 ஆகிய தேதிகளில் அமலில் இருக்கும். இதன்படி மதுரை-விழுப்புரம், விழுப்புரம்-மதுரை இடையேயான பாசஞ்சர் ரயில் விருத்தாச்சலம் வரை மட்டுமே இயக்கப்படும்.
திருப்பதி-புதுச்சேரி, புதுச்சேரி-திருப்பதி இடையேயான பாசஞ்சர் ரயில் சேவை செங்கல்பட்டுடன் நிறுத்தப்படும். சென்னை எழும்பூர்-புதுச்சேரி, புதுச்சேரி-சென்னை எழும்பூர் இடையேயான பாசஞ்சர் ரயில் திண்டிவனத்துடன் நிறுத்தப்படும். இது தவிர மேல்மருவத்தூர் விழுப்புரம், விழுப்புரம்-மேல்மருவத்தூர் மற்றும் விழுப்புரம் புதுச்சேரி, புதுச்சேரி-விழுப்புரம் உள்ளிட்ட பாசஞ்சர் ரயில்கள் முற்றிலும் ரத்து செய்யப்படுகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT