Published : 30 Jul 2017 10:10 AM
Last Updated : 30 Jul 2017 10:10 AM
ஹைட்ரோ கார்பன் திட்டத் துக்கு எதிர்ப்பு தெரிவித்து இளைஞர்கள் மெரினாவில் திரண்டு போராட்டம் நடத்த உள்ளதாக வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் தகவல் பரவியது. இதைத் தொடர்ந்து சென்னை மெரினா கடற்கரையில் போலீஸார் குவிக்கப்பட்டனர். அந்த வழியாகச் சென்ற வாகனங்களை மறித்து வாகன ஓட்டிகளிடம் விசாரணை நடத் தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.
கிராம மக்கள் போராட்டம்
ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசல் கிராம மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு ஆத ரவாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டம் நடந்தது. அரசியல் கட்சியினரும் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராகக் குரல் கொடுத்து வருகின்றனர்.
ஆனால் மத்திய, மாநில அரசுகள் இதைக் கண்டு கொள்ளா மல் இருந்து வருகின்றன.
இந்நிலையில், இத்திட்டத் துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், நெடுவாசல் கிராம மக்களுக்கு ஆதரவு தெரிவித்தும் மெரினா கடற்கரையில் இளைஞர்கள் திரண்டு போராட்டம் நடத்த போவதாக வாட்ஸ்அப், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் நேற்று காலை தகவல் பரவியது.
இதைத் தொடர்ந்து ஜல்லிக் கட்டுக்கு ஆதரவாக இளைஞர்கள் திரண்டதுபோல் ஹைட்ரோ கார்பனுக்கு எதிராகவும் திரண்டு விடக்கூடாது என்பதற்காக மெரினாவில் போலீஸார் குவிக் கப்பட்டனர். குறிப்பாக கலங்கரை விளக்கம் முதல் நேப்பியர் பாலம் வரை காமராஜர் சாலையோரம் போலீஸார் கண்காணிப்பை தீவிரப்படுத்தினர். கடற்கரை உட்புற சாலையிலும் போலீஸார் நிறுத்தப்பட்டனர். அந்த வழியாகச் சென்ற வாகன ஓட்டிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. உளவு பிரிவு போலீஸாரும் ரகசியமாக கண்காணிப்பு பணியை மேற் கொண்டனர். இதனால், மெரினா நேற்று பரபரப்பாக காணப் பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT