Published : 30 Jul 2017 10:04 AM
Last Updated : 30 Jul 2017 10:04 AM
முதல்வர் கே.பழனிசாமியின் செயலர்களில் ஒருவராக இருந்த ஷிவ்தாஸ் மீனா மத்திய அரசுப் பணிக்கு சென்றதால், புதிய செயலராக பி.செந்தில்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
முதல்வர் கே.பழனிசாமியின் செயலர்களாக ஷிவ்தாஸ் மீனா, விஜயகுமார் ஆகியோர் 2 மற்றும் 3-ம் நிலைகளில் செயல்பட்டு வந்தனர். இந்நிலையில், ஷிவ்தாஸ் மீனா மத்திய நகர்ப்புற வளர்ச் சித் துறை இணைச் செயலராக நியமிக்கப்பட்டார். பேரவைக் கூட்டம் முடிந்த நிலை யில், அவர் மாநில அரசுப் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
இது தொடர்பாக தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன் வெளியிட்டுள்ள அறிவிப்பு:
முதல்வரின் 2-ம் நிலை செயலராக இருந்த ஷிவ்தாஸ் மீனா மத்திய அரசுப் பணிக்கு சென்றதால், 3-ம் நிலை செயலராக இருந்த எஸ்.விஜயகுமார், 2-ம் நிலை செயலராக நியமிக்கப் பட்டுள்ளார். நிதித்துறை (செல வினம்) செயலராக இருந்த பி.செந் தில்குமார், முதல்வரின் செயலர் நிலை-3 ஆக நியமிக்கப்பட்டுள்ளார். இவர், முதல்வரின் செயலராக ஷிவ்தாஸ் மீனா கவனித்துவந்த பணிகளை மேற்கொள்வார்.
செந்தில்குமார் மாற்றப்பட்டதை தொடர்ந்து நிதித்துறை (செலவினம்) செயலராக, காப்பகங்கள் மற்றும் வரலாற்று ஆராய்ச்சித் துறை ஆணையர் எம்.ஏ.சித்திக் நியமிக்கப்பட்டுள்ளார்.
இது தவிர, ஷிவ்தாஸ் மீனா கவனித்து வந்த தமிழக பொது மற்றும் மறுவாழ்வுத்துறை செயலர் பணியை அத்துறையின் கூடுதல் செயலர் மைதிலி ராஜேந்திரன் முழு பொறுப்பாக கவனிப்பார்.
இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT