Published : 30 Jul 2017 09:42 AM
Last Updated : 30 Jul 2017 09:42 AM

மனைவியை கொன்ற கணவன் ஓராண்டுக்கு பிறகு கைது

மனைவியை கொலை செய்து புதைத்த கணவன் ஓராண்டுக்குப் பின் கைது செய்யப்பட்டார். உடந்தையாக இருந்த தந்தை மற்றும் கார் ஓட்டுநரும் சிக்கினர்.

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் அருண் (33). இவர் அதே பகுதியைச் சேர்ந்த கனகவல்லி (27) என்பவரை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்தார். இவர்களுக்கு ஆண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் கனகவல்லிக்கு வேறு சிலருடன் பழக்கம் இருந்ததால், கணவன் மனைவி இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்தது. கடந்த ஆண்டு மே 23-ம் தேதி முதல் கனகவல்லியை காணவில்லை. இது தொடர்பாக சேலையூர் போலீஸில் அவரது தாயார் புகார் செய்தார்.

போலீஸார் நடத்திய விசாரணையில் கணவர் அருண், அவரது தந்தை தங்க மணி, கார் ஓட்டுநர் மணிகண்டன் ஆகியோர் சேர்ந்து கனகவல்லியை கொலை செய்தது தெரியவந்தது. இது தொடர்பாக போலீஸார் 3 பேரையும் கைது செய்தனர்.

இது குறித்து போலீஸார் கூறியதாவது:

கணவன் மனைவி இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்தது. பலமுறை கனகவல்லி வீட்டை விட்டு வெளியேறியுள் ளார். இந்நிலையில் கடந்த ஆண்டு மே மாதம் குழந்தையுடன் வீட்டை விட்டு வெளியேறிய கனகவல்லி தாம்பரம் அருகே சேலையூரில் தங்கியிருந்தார். இதனை தெரிந்துகொண்ட அருண் மனைவியை ஜெயங்கொண்டத்துக்கு காரில் அழைத்துச் சென்றார்.

அப்போது கல்வெட்டு என்ற பகுதியில் சென்றபோது இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. காரை நிறுத்தி இருவரும் சண்டையிட்டுள்ளனர். இதில் ஆத்திரம் அடைந்த அருண், கனக வல்லியின் துப்பட்டாவால் அவரது கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளார். பிறகு கொள்ளைக்காடு பகுதியில் உள்ள முந்திரிதோப்பில் உடலை புதைத்துள்ளார். இதற்கு தந்தை தங்கமணி, கார் ஓட்டுநர் மணிகண்டன் உடந்தையாக இருந்துள்ளனர். இதுதொடர்பாக தற்போது 3 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு போலீஸார் தெரிவித்தனர்.

அப்போது கல்வெட்டு என்ற பகுதியில் சென்றபோது இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. காரை நிறுத்தி இருவரும் சண்டையிட்டுள்ளனர். இதில் ஆத்திரம் அடைந்த அருண், கனக வல்லியின் துப்பட்டாவால் அவரது கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளார். பிறகு கொள்ளைக்காடு பகுதியில் உள்ள முந்திரிதோப்பில் உடலை புதைத்துள்ளார். இதற்கு தந்தை தங்கமணி, கார் ஓட்டுநர் மணிகண்டன் உடந்தையாக இருந்துள்ளனர். இதுதொடர்பாக தற்போது 3 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு போலீஸார் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x