Published : 24 Jul 2017 03:23 PM
Last Updated : 24 Jul 2017 03:23 PM

தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு வெப்பம் நீடிக்கும்: வானிலை ஆய்வு மையம்

 

தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு வெப்பம் நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் கூறுகையில், ”கடலிலிருந்து குளிர்ந்த மேல் காற்று தரைப்பகுதிக்கு வராததே வெப்ப நிலை அதிகரிக்கக் காரணம். இன்னும் 2-3 நாட்களுக்கு தமிழகத்தில் வெப்பம் அதிகரித்துக் காணப்படும். 28-ம் தேதிக்கு மேல் காற்று அதிகரித்து மழை பெய்ய வாய்ப்புள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த 3 நாட்களாக கடல் காற்று தாமதமாக வீசி வருகிறது. மேலும் உள் தமிழகத்தில் வானத்தில் குறைவான மேகமூட்டமே காணப்படுகிறது. இதனால் தொடர்ந்து 3-வது நாளாக பல்வேறு நகரங்களில் வெயில் சுட்டெரித்தது வருவது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x