Published : 22 Jan 2017 11:19 AM
Last Updated : 22 Jan 2017 11:19 AM
சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சி.ராஜசேகரன் நேற்று ஒரு புகார் கொடுத்தார். அதில், ‘ஜல்லிக்கட்டுக்காக இளைஞர்கள், பொதுமக்கள் நடத்திவரும் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் விதமாக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி பேசிவருகிறார். பீட்டா அமைப்பைச் சேர்ந்த ராதா ராஜனும் அவ்வாறு பேசி வருகிறார். அவர்கள் இருவர் மீதும் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்.
இதே கோரிக்கையை முன்வைத்து இந்திய தேசிய லீக் கட்சி சார்பிலும் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், அடையாறில் உள்ள ராதா ராஜனின் வீட்டை இளைஞர்கள் சிலர் நேற்று முற்றுகையிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT