Published : 03 Jan 2016 11:16 AM
Last Updated : 03 Jan 2016 11:16 AM

நீலகிரி மாவட்டத்தில் ஆபத்து பயணம் மேற்கொள்ளும் சுற்றுலாப் பயணிகள்: வனத்துறை நடவடிக்கை எடுக்குமா?

பள்ளி, கல்லூரிகளுக்கு அரையாண்டு மற்றும் புத்தாண்டு விடுமுறை என்பதால், நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலாப் பயணிகள் திரண்டுள்ளனர்.

உதகையை அடுத்த தொட்டபெட்டா சிகரம், குன்னூரை அடுத்த லேம்ஸ்ராக் உள்ளிட்ட காட்சிமுனைப் பகுதிகளை கண்டுகளிக்க அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இப் பகுதிகள், கடல் மட்டத்தில் இருந்து பல்லாயிரம் அடி உயரம் கொண்டவை.

இப் பகுதிகளிலுள்ள தடுப்புகளைத் தாண்டி, மேகமூட் டத்தின் இடையே புகைப்படம் எடுக்க சுற்றுலாப் பயணிகள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். மலை இடுக்குகளிலும், ராட்சத பாறைகளின் மீதும் நின்றும் புகைப்படம் எடுப்பதால், தவறினால் பல ஆயிரம் அடி பள்ளங்களில் விழுந்து உயிரிழக்கும் அபாயம் உள்ளது.

ஆபத்தை உணராமல் சுற்றுலாப் பயணிகள் எல்லை மீறுவதை தடுக்க சுற்றுலா மற்றும் வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x