Published : 28 Sep 2016 08:40 AM
Last Updated : 28 Sep 2016 08:40 AM
சென்னை விமான நிலையத்தில் ரூ.18 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னை விமான நிலையத்தில் நேற்று அதிகாலையில் கொழும்பு செல்லும் விமானம் புறப்படத் தயாராக இருந்தது. விமானத்தில் பயணம் செய்ய வந்த பயணிகளையும், அவர்க ளின் உடைமைகளையும் சுங்கத்துறை அதிகாரி கள் சோதனை செய்து அனுப்பிக் கொண்டிருந் தனர். அப்போது வந்த சென்னையைச் சேர்ந்த சாகுல் அமீது வைத்திருந்த கைப்பையை சோதனை செய்தபோது, அதில் அமெரிக்க டாலர், யூரோ உள்ளிட்ட வெளிநாட்டுப் பணம் சுமார் ரூ.18 லட்சம் (இந்திய மதிப்பு) இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
முறையான ஆவணங்கள் இல்லாததால், அவரிடம் இருந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT