Published : 05 Jul 2016 08:08 AM
Last Updated : 05 Jul 2016 08:08 AM

சிபிஐ விசாரணைக்கு எதிர்க்கட்சிகள் வரவேற்பு

திருப்பூர் அருகே ரூ. 570 கோடி பறிமுதல் செய்யப்பட்டது குறித்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டிருப்பதை எதிர்க்கட்சி கள் வரவேற்றுள்ளன.

இது தொடர்பாக திமுக பொரு ளாளர் மு.க.ஸ்டாலின் நேற்று செய்தியாளர்களிடம் கூறிய தாவது:

சட்டப்பேரவைத் தேர்தலின் போது திருப்பூர் அருகே 3 கன் டெய்னர் லாரிகளில் கொண்டு செல்லப்பட்ட ரூ. 570 கோடி பறி முதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என சட்டப் பேரவையில் பேச அனுமதிக்க வில்லை. இப்போது சிபிஐ விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது வரவேற்கத்தக்கது.

சிபிஐ விசாரணை மூலம் ரூ.570 கோடி யாருடையது என்பது மட்டுமல்ல நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர் தல் எப்படியெல்லாம் நடந்தது என்பதும் நிச்சயமாக வெளிவரும். இந்த வழக்கில் சிபிஐ விசாரணை எப்படி இருக்கும் என்பதை இப்போது கூற முடியாது.

பாமக நிறுவனர் ராமதாஸ்

திருப்பூர் அருகே ரூ.570 கோடி பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரத்தில் புதைந்து கிடக்கும் மர்மங்களை வெளிகொண்டு வரும் நோக்குடன் உயர் நீதிமன்றம் அளித்துள்ள இந்தத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது.

சட்டப்பேரவைத் தேர்தலுக்கு 3 நாள்களுக்கு முன்பாக இந்தப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து அரசுத் தரப்பிலும், தேர்தல் ஆணையத் தரப்பிலும் அளிக்கப்பட்ட அனைத்து விஷயங்களும் சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவையாக இல்லை. இந்த விஷயத்தில் ரிசர்வ் வங்கியும், பாரத ஸ்டேட் வங்கி யும் (எஸ்பிஐ) நடந்து கொண்ட விதமும் மர்மமானதாகவே இருந்தது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பணம் மிகப்பெரிய அளவில் விளையாடியது. இவ்விஷயத்தில் யாரையோ காப்பாற்றுவதற்காக முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக கூறப்படும் நிலையில் அனைத்து சந்தேகங்களுக்கும் சிபிஐ விசாரணையில்தான் விடை கிடைக்கும். சிபிஐ விசாரணைக்கு அனைத்துத் தரப்பினரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

தமாகா தலைவர் ஜி.கே.வாசன்

தேர்தல் நேரத்தில் 3 கன் டெய்னர் லாரிகளில் ரூ.570 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. இது பொதுமக்களிடம் பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள் ளது. இதற்கான நியாயமான விளக்கத்தை மத்திய அரசிட மிருந்து மக்கள் எதிர்பார்க் கிறார்கள்.

இச்சூழலில் சட்டம் தனது கடமையை நிலைநாட்டும் வகை யில் திருப்பூரில் பறிமுதல் செய்யப்பட்ட பணம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தர விட்டிருப்பது வரவேற்கத் தக்கது. சிபிஐ விசாரணையில் உண்மை வெளிவரும் என நம்புகிறோம்.

இவ்வாறு வாசன் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x