Published : 28 Aug 2016 10:09 AM
Last Updated : 28 Aug 2016 10:09 AM

தேசியகீதம் பாடும்போது ‘செல்ஃபி’ எடுத்த காங்கிரஸ் பிரமுகர் மீது போலீஸார் வழக்கு பதிவு

புதுச்சேரி லப்போர்த் வீதியில் உள்ள திருவள்ளுவர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி யில் தேசிய கீதம் பாடும் நிகழ்ச்சி கடந்த ஆகஸ்ட் 23-ம் தேதி நடைபெற்றது.

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கலந்துகொண்டு மாணவிகளுடன் சேர்ந்து தேசிய கீதம் பாடினார்.

தேசிய கீதம் பாடிக்கொண்டு இருந்தபோது உருளையன் பேட்டை தொகுதி காங்கிரஸ் தலைவர் ரகுமான், தனது மொபைல் போனில் முதல்வர் நாராயணசாமி உள்ளிட்டோருடன் செல்ஃபி எடுத்தார்.

ரகுமானின் இந்த செயல் சர்ச்சையை ஏற்படுத் தியதோடு, பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் எழுந்தன.

இந்நிலையில், தேசிய கீதத்தை அவமதித்ததாக ஜாமீனில் வெளி வர முடியாத பிரிவில் ரகுமான் மீது ஒதியஞ்சாலை போலீஸார் வழக்கு பதிவு செய் துள்ளனர். தலைமறைவாக உள்ள அவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x