Published : 19 Apr 2017 08:21 AM
Last Updated : 19 Apr 2017 08:21 AM
வேலூர் மத்திய சிறையில் அடைக் கப்பட்டுள்ள முருகனை சந்திக்க அவரது தாயாருக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற முருகன் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து சில நாட் களுக்கு முன்பு, 2 செல்போன், சிம் கார்டுகள் பறிமுதல் செய் யப்பட்டன. சிறை விதிகளின்படி தடை செய்யப்பட்ட பொருளை முருகன் பயன்படுத்திய குற்றச் சாட்டின் அடிப்படையில், அவரை பார்வையாளர்கள் யாரும் சந்திப் பது தற்காலிகமாக தடை செய் யப்பட்டுள்ளது.
இந்நிலையில், வேலூர் மத்திய சிறைக்கு முருகனின் தாயார் சோமணி நேற்று வந்தார். முரு கனை சந்திக்க அனுமதி அளிக்கு மாறு மனு அளித்தார். இதை பரிசீலனை செய்த சிறை நிர்வாகம் அவரது மனுவை ரத்து செய்தனர். இதையடுத்து, சாந்தனை மட்டும் அவர் சந்தித்தார்.
பின்னர், சோமணி செய்தியாளர் களிடம் கூறும்போது, ‘‘ஒரு மாதம் சுற்றுலா விசாவில் இந்தியா வந்துள்ளேன். கடந்த 20 நாட் களாக முருகனை சந்திக்க முடியவில்லை. விரைவில், இலங்கை திரும்ப வேண்டி இருப்பதால் இந்த முறை முருகனை பார்க்க முடியாதது வருத்தமாக உள்ளது. சாந்தனை மட்டும் சந்தித்து பேசினேன். தங்களை தமிழக அரசு விடுதலை செய்யும் என்ற நம்பிக்கையுடன் சாந்தன் இருக்கிறார்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT