Published : 17 May 2017 07:48 AM
Last Updated : 17 May 2017 07:48 AM

வேப்பேரியில் பெண் மருத்துவர் மர்ம மரணம்

வேப்பேரியில் பெண் மருத்துவர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இவர் கொலை செய்யப்பட்டாரா என்று போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

வேப்பேரி சூளை பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வந்தவர் சுதா மல்லிகா (27). இவர் ஸ்டான்லி அரசு மருத் துவமனையில் இதயம் தொடர்பான மருத்துவ மேற்படிப்பு படித்து வந் தார். இவரது கணவர் சதீஸ் குமார் (28), ஸ்டான்லி மருத்துவமனையில் நரம்பியல் பிரிவில் மருத்துவராக உள்ளார். சுதா மல்லிகா ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர். இரு வரும் காதலித்து இரண்டரை ஆண்டு களுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஓர் ஆண் குழந்தை உள்ளது. இந்நிலை யில் நேற்று முன்தினம் இரவுப் பணியை முடித்து வீடு திரும்பிய சதீஸ் குமார் தன் மனைவி தூக்கில் தொங்கி சடலமாகக் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து தகவலறிந்ததும் வேப்பேரி போலீஸார் சென்று சுதா மல்லிகாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீஸார் கூறும்போது, “சுதா மல்லிகா தனது மகனை அவரது தாயாரின் பராமரிப்பில் விட்டுள்ளார். பணிச்சுமை மற்றும் மகனை பார்க்க முடியாத ஏக்கத்தால் சுதா மல்லிகா தற்கொலை செய்து கொண்டுள்ளதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர் கொலை செய்யப்பட வாய்ப்பிருக்கிறதா? என்றும் விசாரிக்கிறோம். திருமணமாகி இரண்டரை ஆண்டுகள் மட்டுமே ஆவதால் ஆர்டிஓ விசாரணையும் நடந்து வருகிறது” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x