Published : 02 Jan 2017 09:43 AM
Last Updated : 02 Jan 2017 09:43 AM
இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.2.44 கோடி மதிப் புள்ள 8.7 கிலோ தங்கக் கட்டி களை வருவாய் புலனாய்வுத் துறையினர் ராமநாதபுரம் அருகே பறிமுதல் செய்தனர். இது தொடர் பாக ஒருவரை கைது செய்தனர்.
தென்மாவட்டக் கடலோரப் பகுதிகளில் அதிக அளவில் தங்கம் கடத்தப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வுத் துறை சென்னை மண்டல அதிகாரிக ளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் ராமநாதபுரம் மாவட்டக் கடலோரப் பகுதிகளில் வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் (டிச.31) தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
ராமநாதபுரம் மாவட்டம், உச்சிப்புளி ரயில்வே கேட் அருகே நேற்று முன்தினம் இரவு வேகமாக வந்த ஒரு காரை நிறுத்தி அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் ஓட்டுநரின் சீட்டுக்கு அடியில் தங்கக் கட்டிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. 24 காரட் கொண்ட தலா 100 கிராம் எடையுள்ள 87 தங்கக் கட்டிகளைப் பறிமுதல் செய் தனர். இதன் மதிப்பு ரூ.2.44 கோடி. மொத்தம் 8.7 கிலோ எடை யுள்ள இந்த தங்கக் கட்டிகள் இலங்கையில் இருந்து மீன்பிடி படகு மூலம் ராமேசுவரம் கடற் கரைக்கு கடத்தி வரப்பட்டுள்ளது.
அவற்றை காரில் கடத்திச் சென்றபோது, அதிகாரிகள் பிடித் தனர். காரை ஓட்டி வந்த உச்சிப்புளி யைச் சேர்ந்த முஜிபுர் ரஹ்மான்(31) என்பவரை கைது செய்தனர்.
இவரை மதுரை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இந்த கடத்தலில் தொடர்புடையர்கள் குறித்து வருவாய் புலனாய்வுத் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT