Published : 31 Jan 2014 09:19 AM
Last Updated : 31 Jan 2014 09:19 AM

பிப்.3 வரை பேரவை கூட்டம்

தமிழக சட்டப்பேரவையில் வியாழக்கிழமையன்று கவர்னரின் உரை முடிந்ததும், பேரவைத் தலைவர் ப.தனபால் தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூடியது. அந்த கூட்டத்தில் சட்டப்பேரவை நிகழ்ச்சிகளை வரும் 3-ம் தேதி வரை நடத்துவது என முடிவெடுக்கப்பட்டது.

அது குறித்து பேரவைத் தலைவர் தனபால் நிருபர்களிடம் கூறியதாவது: சமீபத்தில் மறைந்த முன்னாள் பேரவை உறுப்பினர்கள் 5 பேருக்கு (சௌ.வே.வரதராஜன், ந.பழனிவேல், எஸ்.ரெத்தினராஜ், ஆ.கருப்பையா, சி.துரைராஜ்) 31-ம் தேதி (வெள்ளி) இரங்கல் குறிப்புகள் வாசிக்கப்பட்டு, கவர்னரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடக்கிறது. மறுநாள் விவாதம் தொடர்கிறது. ஞாயிறு விடுமுறை.

பிப்ரவரி 3-ம் தேதி, கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதமும், முதல்வர் ஜெயலலிதாவின் பதிலுரையும் இடம்பெறும். அன்றைய தினம், சட்டமுன்வடிவுகள் ஆய்வு செய்யப்பட்டு, நிறைவேற்றப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x