Published : 19 Nov 2014 12:55 PM
Last Updated : 19 Nov 2014 12:55 PM

தருமபுரி எம்.பி. அன்புமணி மவுனம் ஏன்?

குழந்தைகள் தொடர் பலி விவகாரத்தில் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் அன்புமணி, மவுனம் காப்பது தொகுதி மக்கள் மத்தியில் விமர்சனத்தை உருவாக்கியுள்ளது.

தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் பச்சிளங்குழந்தைகள் பிரிவில் நவம்பர் 14-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை 11 குழந்தைகள் இறந்துள்ளது. இது தொடர்பாக பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனக் குரல்கள் எழுந்துள்ளது.

ஆனால் தருமபுரி நாடாளுமன்ற தொகுதியின் உறுப்பினரான அன்புமணி ராமதாஸ் இதுவரை இந்த விவகாரம் தொடர்பாக எந்த கருத்தும் கூறவில்லை. இது தொகுதி மக்கள் மத்தியில் விமர்சனத்தை உருவாக்கியுள்ளது. இதுபற்றி தருமபுரியைச் சேர்ந்த சிலர் கூறும்போது, ‘மருத்துவரான அன்புமணி, குழந்தைகள் தொடர் பலி விவகாரம் தொடர்பாக கண்டனம் அல்லது விசாரணை கோரல் என எந்த அறிக்கையும் தரவில்லை.

தனது கருத்தாகவும் எதையும் பதிவு செய்யவில்லை. தனது தொகுதியில் நடந்துள்ள இந்த கசப்பான சம்பவம் தொடர்பாக அவர் அக்கறை காட்டவில்லை என்றே தோன்றுகிறது’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x