Published : 18 Nov 2014 11:04 AM
Last Updated : 18 Nov 2014 11:04 AM
ஆம்பூர் அருகே சமூக சேவகர் கொலை வழக்கில் பாலூர் ஊராட்சி மன்ற தேமுதிக கவுன்சிலரை தனிப்படை போலீஸார் நேற்று கைது செய்தனர்.
ஆம்பூர் தாலுகா, மாதனூர் அடுத்த பாலூர் ஊராட்சிக்கு உட்பட்ட புத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தணிகாச்சலம் (59). முதுநிலை பட்டதாரியான இவர், திருமணம் செய்து கொள்ளாமல் சமுதாய நற்பணிகள் செய்து வந்தார். ஆம்பூர் தோட்டாளம் ஏரிக் கால்வாய் ஆக்கிரமிப்புப் பிரச்சினை தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த தணிகாச்சலம், அதில் வெற்றியும் பெற்றார்.
இதையடுத்து, நீதிமன்ற உத்தரவுப்படி கால்வாய் ஆக்கிர மிப்புகளை மாவட்ட நிர்வாகம் அகற்றியது. இதனால் ஆக்கிர மிப்பாளர்களின் அதிருப்திக்கு தணிகாச்சலம் ஆளானார். இந் நிலையில், கடந்த 12-ம் தேதி இரவு மாதனூர் வழியாக புத்தூர் நோக்கி சைக்கிளில் சென்ற தணிகாச்சலம் கொலை செய்யப்பட்டார்.
இதுகுறித்து ஆம்பூர் தாலுகா போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த னர். இந்நிலையில், தணிகாச்சலம் கொலை வழக்கில் தேமுதிக பிரமுகர் வெங்கடேசன் (எ) லோ கநாதனை (39) தனிப்படை போலீ ஸார் நேற்று கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறும்போது, ‘’‘பாலூர் ஊராட்சி மன்ற 8-வது வார்டு கவுன்சிலராக உள்ள லோகநாதனுக்கும், தணிகாச்சலத்துக்கும் ஆக்கிர மிப்பு தொடர்பாக முன்விரோதம் இருந்துள்ளது. அதனால், கவுன்சிலர் லோகநாதன், கடந்த 12-ம் தேதி நள்ளிரவு தனியாகச் சென்ற தணிகாச்சலத்தை வழிமடக்கி அரிவாளால் வெட்டிக் கொலை செய்துள்ளார்’’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT