Published : 17 Jun 2016 08:16 AM
Last Updated : 17 Jun 2016 08:16 AM

கொள்ளையர் தாக்கியதில் உயிரிழந்த தலைமைக் காவலர் குடும்பத்துக்கு முதல்வர் ரூ.5 லட்சம் நிவாரணம்

ஓசூரில் சங்கிலி பறிப்பு கொள்ளை யர்கள் தாக்கியதில் உயிரிழந்த தலைமைக் காவலர் குடும்பத் துக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் ஜெய லலிதா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நேற்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: கிருஷ் ணகிரி மாவட்டம் யு.சிங்கிரிப் பள்ளியில் கடந்த 15-ம் தேதி சங்கிலிப் பறிப்பு சம்பவம் நடந்தது. இது தொடர்பாக, கிருஷ்ண கிரி, ஓசூர் காவல் நிலையத்தைச் சேர்ந்த உதவி ஆய்வாளர் கண் ணன், தலைமைக் காவலர்கள் முனுசாமி, தனபால், சிப்காட் காவல் நிலைய உதவி ஆய்வாளர் நாகராஜ் ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டது.

இவர்கள், ஓசூர் பாரதிதாசன் நகர் அருகில், வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, செயின் பறிப்பு சம்பவத்தில் தொடர்பு உடையவர்கள் என சந் தேகிக்கப்பட்ட நபர்களை பிடிக்க முற்பட்டனர். அவர்கள் கத்தியால் தாக்கியதில் முனுசாமி பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்தார். இவரது குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த சம்பவத்தில் உதவி ஆய்வா ளர் நாகராஜ் மற்றும் தலைமைக் காவலர் தனபால் ஆகியோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களுக்கு நல்ல முறையில் சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதிப்படுத்தும்படி கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிடப் பட்டுள்ளது. இவர்கள் இருவரம் பூரண குணடைந்து வீடு திரும்ப வேண்டும் என்பது என் விருப்பம்.

இந்த சம்பவத்தில் உயிரிழந்த முனுசாமி குடும்பத்துக்கு ரூ.5 லட்சம், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும்.

இந்த சங்கிலி பறிப்பு மற்றும் காவலர்கள் மீது தாக்குதலில் ஈடுபட்டு தப்பிச் சென்றவர்களை விரைவாக கண்டுபிடித்து சட்டப் படி நடவடிக்கை எடுக்க உத்தர விடப்பட்டுள்ளது. இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x