Published : 08 Dec 2015 08:08 AM
Last Updated : 08 Dec 2015 08:08 AM

மார்கழி இசை நிகழ்ச்சி ரத்து: பாம்பே ஜெயஸ்ரீ அறிவிப்பு

இந்த ஆண்டு தனது மார்கழி பருவ இசை நிகழ்ச்சியை ரத்து செய்வதாக பாம்பே ஜெயஸ்ரீ அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது;

அண்மையில் பெய்த கன மழையால் கலைகளுக்கு பேராதரவு தரும் சென்னை மாநகரம் பேரழிவை சந்தித்துள்ளது. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் தனிநபர் மற்றும் குழுக்கள் அனைவரும் இரவு, பகலாக ஈடுபட்டுள்ளனர். பலர் வீடு இழந்தும், அத்தியாவசிய பொருட்களை இழந்தும் வாடிக்கொண்டிருக்கின்றனர். இந்த அசாதாரண சூழலில் இசை விழாக்கள் நடத்துவது ஏற்புடையது அல்ல என கருதுகிறேன். ஆகவே இந்த மார்கழி பருவ இசை நிகழ்ச்சியை ரத்து செய்கிறேன். ரசிகர்கள், நண்பர்கள் இசை நிகழ்ச்சிக்கு செலவிடும் தங்களது உழைப்பை, ஆற்றலை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு மீண்டு வர செலவிடுவீர்கள் என நம்புகிறேன்.

இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x