Published : 06 Jun 2017 09:14 AM
Last Updated : 06 Jun 2017 09:14 AM

டெல்லியில் இன்று 10 ஆயிரம் டாக்டர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழக மருத்துவ சங்கத்தின் முன்னாள் தலைவரும், இந்திய மருத்துவக் கவுன்சில் உறுப்பினருமான டாக்டர் ஆர்.வி.எஸ்.சுரேந்திரன் கூறியதாவது:

நமது நாட்டில் சுமார் 10 லட்சம் பேர் நவீன மருத்துவம் படித்த டாக்டர்கள் பணியாற்றி வருகிறார்கள். கடந்த 50 ஆண்டுகளில் மருத்துவத்துறை மிகவும் முன்னேறியுள்ளது. ஆனால், தொடர்ச்சியாக மத்திய அரசு இயற்றும் பல சட்டங்கள் காரணமாக நவீன மருத்துவ சேவை நசுக்கப்பட்டு டாக்டர்கள் குற்றவாளிகளைப்போல் சித்தரிக்கப்படு கின்றனர். எனவே மக்கள் - டாக்டர் விரோத சட்டங்களை மாற்றி அமைக்க வலியுறுத்தி டெல்லியில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. மத்திய அரசுக்கு 15 நாட்கள் அவகாசம் கொடுக்கப்படும்.

நடவடிக்கை எடுக்காவிட்டால், அடுத்தக் கட்ட தொடர் போராட்டத்தில் டாக்டர்கள் ஈடுபடுவார்கள். ஜூன் 6-ம் தேதி (இன்று) காலை 10 மணி முதல் 11 மணி வரை ஒரு மணி நேரம் டாக்டர்கள் தங்களுடைய பணிகளைப் புறக்கணிப்பார்கள் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x