Published : 05 Feb 2014 12:00 AM
Last Updated : 05 Feb 2014 12:00 AM
இந்தியாவில் திடக்கழிவு மேலாண்மையை திறம்பட நடத்துவது குறித்த இந்தோ-ஜப்பான் கூட்டுக் கருத்தரங்கு சென்னையில் செவ்வாய்க்கிழமை நடந்தது.
திடக்கழிவு மேலாண்மையில் உள்ள புது தொழில்நுட்பங்களை பற்றிய இந்தோ-ஜப்பான் கருத்
தரங்கம் சென்னையில் செவ்வாய்க்கிழமை நடந்தது. ஜப்பானில் பல வருடங்களாக திடக்கழிவு மேலாண்மையில் பிலாண்டக் எனும் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.
அது இந்தியாவிலுள்ள கழிவுகளை பற்றிய பல்வேறு சோதனைகளை நடத்தியது.அதில் இந்தியாவில் உள்ள கழிவுகளின் தன்மை, அவற்றை மேலாண்மை செய்வதில் உள்ள பிரச்சினைகள், இந்தியா பயன்படுத்த வேண்டிய நவீன தொழில்நுட்பங்கள் என்று பல்வேறு விஷயங்களை அலசி ஆராய்ந்து அறிக்கை ஒன்றை தயாரித்தது.
அந்த அறிக்கையினை பற்றி இந்திய சுற்றுப்புறச்சூழல் துறை அலுவலர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களுடன் கலந்தாலோசிக்கும் விதமாகவே இந்த இந்தோ-ஜப்பான் கருத்தரங் கம் நடத்தப்பட்டது.
இது குறித்து ஜப்பான் சுற்றுச் சுழல் துறை அமைச்சகத்தின் அலுவலரான கஸுனோபு ஒனொகவா ‘தி இந்து’விடம் கூறியதாவது:
ஜப்பானில் 30 ஆண்டுகளுக்கு மேலாக திடக்கழிவு மேலாண்மையில் பிலாண்டக் நிறுவனம் சிறந்து விளங்குகிறது. இந்தியாவிலுள்ள கழிவுகள் குறித்து பல்வேறு சோதனைகளை அது நடத்தியது.
அதன்படி, இந்தியாவில் திடக்கழிவு மேலாண்மை பணியை மேற்கொள்வதற்கான தொழில்நுட்பங்கள், முக்கிய
மாக கழிவுகளில் நிறைந்திருக்கும் டை-ஆக்ஸின் போன்ற வேதிப் பொருட்களை அகற்றுவதற்கான வழிமுறைகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை இந்த கருத்தரங்கில் விவாதித்தோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த கருத்தரங்கில் இந்தியா வுக்கான ஜப்பான் துணைத் தூதர் யோஷிஹிகோ ஹோரி, தமிழ்நாடு நகராட்சி நிர்வாக ஆணையர் சந்திரகாந்த் காம்பிள், திருச்சி மாநகராட்சி ஆணையர் தண்டபாணி உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT