Published : 05 Jan 2017 08:24 AM
Last Updated : 05 Jan 2017 08:24 AM

மனைவியின் கண்முன் திரையரங்கு ஊழியர் படுகொலை

சென்னை மேடவாக்கத்தில் திரையரங்கு ஊழியர் ஒருவர், மனைவியின் கண்முன்னே வெட்டிக் கொல்லப்பட்டார்.

மேடவாக்கம் காந்தி நகர் பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் பாண்டியராஜன். இவரது மகன் அறிவழகன் (35). இவர் சென்னையில் உள்ள தனியார் திரையரங்கில் எலக்ட்ரீஷியனாக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி சுரேகா(24). இவர்களுக்கு திருமணம் ஆகி 6 ஆண்டுகள் ஆகின்றன. சாதனா (4) என்ற பெண் குழந்தை உள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவு ஒரு மணியளவில் 4 பேர் கொண்ட மர்ம கும்பல் அறிவழகனை சரமாரியாக வெட்டியது. இதைத் தடுத்த மனைவி சுரேகாவுக்கும் கையில் வெட்டு விழுந்தது. பின்னர் அந்த கும்பல் மனைவியை கட்டிப் போட்டு, கணவனை வீட்டுக்கு வெளியே இழுத்துச் சென்று சரமாரியாக வெட்டிக் கொன்றது. பின்னர் சடலத்தை புதரில் வீசியது.

இதுகுறித்து தனது தாயார் சம்பூரணத்துக்கு சுரேகா போனில் தகவல் தெரிவித்தார். அவர் வந்து பார்த்தபோது வீட்டின் அருகில் ரத்தவெள்ளத்தில் அறிவழகன் இறந்து கிடந்தார். இது தொடர்பாக தகவல் அறிந்ததும் பள்ளிக்கரணை போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொலை குறித்து அறிவழகனின் உறவினர் ஒருவர் கூறும்போது, “இந்த பகுதியில் கஞ்சா விற்பது, மது குடிப்பது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடக்கும். போலீஸாரிடம் புகார் கூறியும் எந்த நடவடிக்கையும் இல்லை. அறிவழகன் இதனை தட்டி கேட்பது வழக்கம். இதில் தொடர்புடைய யாரேனும் கொலை செய்திருக்கலாம்” என்றார்.

கொலை குறித்து பள்ளிக்கரணை போலீஸார் தரப்பில் கூறியதாவது:

இறந்த அறிவழகனின் மனை விக்கு வேறு ஒரு இளைஞருடன் கள்ள தொடர்பு இருந்துள்ளது. இது தொடர்பாக இருவருக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டது. இத னால் இந்த கொலை நடந்திருக்க லாம். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x