Published : 28 Mar 2014 10:37 AM
Last Updated : 28 Mar 2014 10:37 AM

மதச்சார்பற்ற ஜனதாதளம் வேட்பாளர்கள் அறிவிப்பு

நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் போட்டியிடவுள்ள 2 தொகுதிகளுக்கான வேட்பாளர் களை மதச்சார்பற்ற ஜனதா தளம் அறிவித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளர் கரு. பவுனாச்சாரி வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

நாடாளுமன்றத் தேர்தலில் கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை ஆகிய தொகுதிகளில் மதச்சார்பற்ற ஜனதா தளம் போட்டியிடுகிறது. கிருஷ்ணகிரி தொகுதியில் என்.எஸ்.எம். கவுடாவும், திருவண்ணாமலை தொகுதியில் எம்.ஆர். மாணிக்கவேலு ஆச்சாரி யாரும் வேட்பாளர்களாக அறிவிக் கப்பட்டுள்ளனர்.

இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் எங்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. கம்யூனிஸ்டுகள் போட்டியிடும் 18 தொகுதிகளிலும் மதச்சார்பற்ற ஜனதா தளம் அவர்களுக்கு ஆதரவு கொடுக்கும்.

இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x