Published : 25 Jun 2016 09:00 AM
Last Updated : 25 Jun 2016 09:00 AM
தமிழகத்தில் நடப்பாண்டு கூடுத லாக 10 இடங்களில் கடலோரக் காவல் நிலையங்கள் திறக்கப் படும் என்று கடலோரப் பாது காப்பு ஏடிஜிபி சி.சைலேந்திர பாபு கூறினார்.
புதுக்கோட்டையில் செய்தி யாளர்களிடம் அவர் நேற்று கூறியது: தமிழகத்தில் 12 கட லோரக் காவல் நிலையங்கள் இருந்தன. கடந்த 5 ஆண்டுகளில் புதிதாக 20 காவல் நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. நடப் பாண்டு புதிதாக 10 காவல் நிலையங்கள் திறக்கப்பட உள்ளன.
இதன்மூலம் 20 கிலோ மீட்டருக்கு ஒரு காவல் நிலை யம் என்ற நிலை உருவாக் கப்பட்டுள்ளது.
கடந்த 3 ஆண்டுகளில் கட லோரக் காவல் படையில் சேர்க் கப்பட்ட 500 ஊர்க்காவல் படை யினரும், கடலோரக் காவல் படையினருடன் இணைந்து, ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடலோரக் காவல் படைக்கு அரசு அளித்துள்ள, கடலோரத் தில் செல்லக்கூடிய வாகனம் ரோந்துப் பணிக்கு மிகவும் பய னுள்ளதாக உள்ளது.
தமிழகத்தில் கடலோரப் பாதுகாப்பு சிறப்பாக உள்ளது என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT