Published : 10 Feb 2017 12:06 PM
Last Updated : 10 Feb 2017 12:06 PM

தமிழக சட்டம் ஒழுங்கு நிலவரம்: ஆளுநருடன் டிஜிபி அவசர ஆலோசனை

தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை இன்று (வெள்ளிக்கிழமை) காலை காவல்துறை டிஜிபி டி.கே.ராஜேந்திரன் சந்தித்தார். தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்து டிஜிபியிடம் ஆளுநர் விசாரித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரைத் தொடர்ந்து தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனும் சந்திக்கவிருக்கிறார்.

கிருஷ்ணராயபுரம் தொகுதி பெண் எம்எல்ஏ கீதா, குன்னம் எம்எல்ஏ ராமச்சந்திரன் ஆகியோரது உறவினர்கள் தொடர்ந்த வழக்கில் அவர்கள் இருவரையும் சேர்த்து மற்ற எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் எங்கு இருக்கிறார்கள் என்பது குறித்து வரும் திங்கள்கிழமைக்குள் தமிழக அரசு, டிஜிபி, போலீஸ் கமிஷனர் மற்றும் சசிகலா பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இத்தகைய சூழலில் தமிழக ஆளுநருடனான டிஜிபி சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x