Published : 16 May 2017 09:01 AM
Last Updated : 16 May 2017 09:01 AM
தாம்பரம் அருகே அன்னை அஞ்சுகம் நகரில் உள்ள டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் டாஸ்மாக் கடையை கொளுத்தினர்.
தாம்பரம் அடுத்த சோமங்கலம் நெடுஞ்சாலை பெருங்களத்தூர் பேரூராட்சி அன்னை அஞ்சுகம் நகர் பகுதியில் இயங்கிவந்த டாஸ்மாக் கடை நீதிமன்ற உத்தரவினால் அப்புறப்படுத்தப்பட்டது. இந்நிலை யில், அஞ்சுகம் நகர் குடியிருப்பு பகுதியில் கடை திறக்கும் முயற்சி யில் அதிகாரிகள் ஈடுபட்டனர். இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இது தொடர் பாக வட்டாட்சியரிடம் மனு அளித்த னர். ஆனால் பொதுமக்கள் எதிர்ப் பையும் மீறி கடை திறக்கப்பட்டது.
இதனையடுத்து, விடுதலை சிறுத்தைகள் மாநில துணை பொதுச் செயலாளர் வன்னி அரசு தலைமையில் ஏராளமான விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஒரு சிலர் கடையை அடித்து நொறுக்கி தீ வைத்து கொளுத்தினர். இதில் பல லட்சம் மதிப்புள்ள மதுபானங்கள் சேதமடைந்தன. இது தொடர்பாக பீர்க்கன்கரணை போலீஸார் விசாரிக்கின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT