Published : 29 Mar 2014 10:38 AM
Last Updated : 29 Mar 2014 10:38 AM

ரூ.2,400 கோடி வரி: எதிர்த்து நோக்கியா நிறுவனம் வழக்கு

நோக்கியா நிறுவனம் விற்பனை செய்த செல்போன்களுக்காக மாநில அரசுக்கு ரூ.2 ஆயிரத்து 400 கோடி வாட் வரி செலுத்த வேண்டும் என்று கூறி வணிகவரித் துறை கடந்த பிப்ரவரி மாதம் உத்தரவிட்டது.

இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் நோக்கியா நிறுவனம் மனு தாக்கல் செய்துள்ளது. தங்கள் தரப்பு கருத்தை கேட்காமல் தமிழக அரசு பிறப்பித்த இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று நிறு வனம் கூறியுள்ளது. இந்த மனு, நீதிபதி பி.ராஜேந்திரன் முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. மனு மீதான விசாரணையை ஏப்ரல் 1-ம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x