Published : 25 Jun 2016 08:40 AM
Last Updated : 25 Jun 2016 08:40 AM

ஆவின் பால் கொள்முதல் 31 லட்சம் லிட்டரை எட்டியது

ஆவின் பால் கொள்முதல் 31 லட்சம் லிட்டரை எட்டியதை தொடர்ந்து, அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர் ஆலோசனை நடத்தினார்.

நந்தனத்தில் உள்ள ஆவின் அலுவலகத்தில், பால் கொள்முதல் மற்றும் பால் விற்பனை தொடர் பாக அமைச்சர் எஸ்.பி.சண்முக நாதன் நேற்று ஆய்வு நடத்தினார். நந்தனம் வளாகத்தில் கட்டப்படும் ஆவின் நுகர்வோர் சேவை மையம் மற்றும் அலுவலக கட்டிட கட்டுமான பணிகளை பார்வையிட்டு, விரை வாக முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

மேலும், ஆவின் நிறுவனத்தின் பால் கொள்முதல் தினசரி 31 லட்சம் லிட்டர் என்ற இலக்கை எட்டியுள் ளது. இதன் அடிப்படையில் ஆவின் நிறுவனம் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் அமைச்சர் அதிகாரிகளுக்கு ஆலோ சனை வழங்கினார்.

இந்த ஆய்வில் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணைய தலைவர் அ.மில்லர், ஆவின் நிர்வாக இயக்குநர் சுனீல் பாலிவால், ஆவின் இணை நிர்வாக இயக்குநர் லீலா அலெக்ஸ் உள்ளிட் டோர் பங்கேற்றனர். ஆவின் நிறுவ னம் இத்தகவலை தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x