Published : 09 Feb 2017 08:25 AM
Last Updated : 09 Feb 2017 08:25 AM

சட்டப்பேரவையை கலைக்க வேண்டும்: ஆளுநருக்கு 5 ஆயிரம் பேர் கடிதம்

தமிழகத்தில் தற்போது அசாதாரண சூழல் நிலவுவதால், தமிழக சட்டப்பேரவையைக் கலைக்க வேண்டும் என்று தமிழக ஆளுந ருக்கு, முன்னாள் எம்எல்ஏ மலரவன் உட்பட 5 ஆயிரம் பேர் இ-மெயில் மூலம் கடிதம் அனுப்பியுள்ளனர்.

தன்னைக் கட்டாயப்படுத்தி ராஜினாமா கடிதம் பெற்றதாக தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் புகார் தெரிவித்திருந்தார். இதையடுத்து, தமிழக அரசியலில் அசாதாரண சூழல் நிலவுகிறது. இந்நிலையில், முன்னாள் எம்எல்ஏ வும், தீபா பேரவை நிர்வாகியு மான மலரவன் தலைமையில் 5 ஆயிரம் பேர், தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவுக்கு இ-மெயில் மூலம் கடிதம் அனுப்பி யுள்ளனர்.

அதில், தற்போதுள்ள அரசியல் சூழ்நிலையைக் கருத்தில்கொண்டு, தமிழக சட்டப்பேரவையைக் கலைக்க வேண்டும். உடனடியாக மீண்டும் சட்டப்பேரவைத் தேர்தலை அறிவித்து, நடத்த வேண்டும். அப்போதுதான் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள குழப்பம் நீங்கும்” என்று குறிப்பிட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x