Published : 20 Mar 2017 04:55 PM
Last Updated : 20 Mar 2017 04:55 PM
கடலூரில் விஷ வாயு தாக்கி துப்புரவு தொழிலாளர்கள் 3 பேர் உயிரிழந்தனர்.
பாதாளச் சாக்கடையை சுத்தம் செய்யும் போது விஷ வாயு தாக்கியதால் துப்புரவுத் தொழிலாளர்கள் 3 பேர் உயிரிழந்தனர்.
துப்புரவுத் தொழிலாளர்கள் எந்தக் கவசமும், பாதுகாப்பு உபகரணங்களையும் பயன்படுத்தாமல் இருந்ததாலேயே இந்த விபரீதம் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது.
தீயணைப்புப் படை வீரர்கள் துப்புரவுத் தொழிலாளர்கள் மூவரின் உடல்களை பாதாள சாக்கடையில் இருந்து எடுத்தனர். அதற்குப் பிறகு மூவரின் உடலும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT