Published : 04 Jan 2014 02:19 PM
Last Updated : 04 Jan 2014 02:19 PM

5 நாள் போராட்டத்திற்கு பிறகு ராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்குச் சென்றார்கள்

ராமேஸ்வரம் தீவு நாட்டுக் படகு மீனவர்கள் ஐந்து நாள் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு பிறகு சனிக்கிழமை கடலுக்குச் சென்றார்கள்.

கடந்த டிசம்பர் 29 அன்று பாம்பன் நாட்டுப் படகு மீனவர்கள் 18 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்ததைக் கண்டிதுது ராமேஸ்வரம் மற்றும் பாம்பன் நாட்டுப் படகு மீனவர்கள் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களையும், இந்திய கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்களையும் நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும். இருநாட்டு மீனவர்களின விசைப்படகுகளை எவ்வித நிபந்தனையும் இன்றி விடுவிக்க வேண்டும். இருநாட்டு மீனவர்களின் பேச்சுவார்த்தையை துரிதமாக நடத்தப்பட வேண்டும்உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 2 அன்று பாம்பனில் நாட்டுப் படகு மீனவர்கள் தலைவர் சைமன் தலைமையில் மீனவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

இந்நிலையில் மீனவப் பிரதிநிதிகளிள் கூட்டம் ராமேஸ்வரத்தில் வெள்ளிக்கிழமை இரவ நடைபெற்றது . இதில் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தினால் நாட்டுப் படகு மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாலும், மீனவர்களுக்கு மாற்றுத் தொழில் இல்லாதாலும் வேலை நிறுத்தத்தை கைவிடுவதாக அறிவித்தனர். அதனைத் தொடர்ந்து ராமேஸ்வரம் மற்றும் பாம்பன் மீனவர்கள் சனிக்கிழமை கடலுக்குச் சென்றனர்.

இதுகுறித்து நமது செய்தியாளரிடம் பேசிய நாட்டுப் படகு மீனவப்பிரதிநிதி ராயப்பன் கூறியதாவது,

''தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தினால் மீனவர்களின் வாழ்வாதாரம் பெரியதளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வேலை நிறுத்தப் போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளோம். ஆனால் அடுத்தகட்டமாக மீனவர்கள் ஜனவரி 9ம் தேதி மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டமும், அதனைத் தொடர்ந்து ரயில் மறியல் போராட்டமும் நடத்த ஆயத்தமாகி உள்ளோம், என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x