Published : 16 Mar 2017 08:10 AM
Last Updated : 16 Mar 2017 08:10 AM

வேட்புமனு தாக்கல் செய்வதை வீடியோவில் பதிவு செய்ய உத்தரவு

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு இன்று தொடங்கும் வேட்புமனு தாக்கலை வீடியோவில் பதிவு செய்ய வேண்டும் என்று மாவட்ட தேர்தல் அலுவலர் தா.கார்த்திகேயன் அறிவுறுத்தியுள்ளார்.

ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம், மாவட்ட தேர்தல் அலுவலர் தா.கார்த்திகேயன் தலைமையில், ரிப்பின் மாளிகையில் நேற்று நடைபெற்றது. அப்போது, வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்யும்போது, அதை வீடியோவில் பதிவு செய்ய வேண்டும். அனைத்து வாக்குச் சாவடிகளையும் முறையாக ஆய்வு செய்து, தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். கட்டுப்பாட்டு அறைக்கு தேர்தல் தொடர்பாக வரும் புகார்களை பதிவு செய்து, சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு தெரிவித்து, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட தேர்தல் அலுவலர் அறிவுறுத்தினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x