Published : 18 Mar 2017 09:26 AM
Last Updated : 18 Mar 2017 09:26 AM

தென் தமிழகத்தில் மழை வாய்ப்பு

வெப்ப சலனம் காரணமாக தென் தமிழகத்தின் உள் பகுதியில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக, சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் கூறும்போது, “அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தின் உள் பகுதியில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதர தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவும். சென்னையை பொறுத்தவரை வானம் பொதுவாக ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்” என்றார்.

வெள்ளிக்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சிவகாசியில் 4 செமீ, சங்கரன்கோவிலில் 3 செமீ, ராஜபாளையம், விருதுநகர், நாங்குநேரியில் தலா 2 செமீ, கழுகுமலையில் 1 செமீ மழை பதிவாகியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x