Published : 25 Jun 2016 08:32 AM
Last Updated : 25 Jun 2016 08:32 AM
சென்னை மாநகராட்சி வெளியிட் டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
பெருநகர சென்னை மாநகராட் சியில் ஏழை, எளிய மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் சுத்திகரிக்கப் பட்ட குடிநீரை இலவசமாக வழங்கும் வகையில் கடந்த பிப்ரவரி 13-ம் தேதியன்று அம்மா குடிநீர் திட்டம் அறிவிக்கப்பட்டது. இதன்படி ஒரு குடும்பத்துக்கு நாள் ஒன்றுக்கு 20 லிட்டர் அளவுக்கு விலையில்லாமல் குடிநீர் வழங்கப் படும். குடிநீர் சுத்திகரிப்பு தானியங்கி நிலையத்தில் பொதுமக்கள் இந்த குடிநீரை பெற்றுக்கொள்ளலாம்.
முதற்கட்டமாக பெருநகர சென்னை மாநகராட்சியில் 20 இடங் களில் அம்மா குடிநீர் திட்டத்துக்கான ஒப்பங்கள் கோரப்பட்டு 18 இடங்களில் அமைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ளது. ஒப்பந்ததாரர் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை நிறுவி, 5 ஆண்டுகளுக்கு பராமரிப்பு பணியையும் மேற்கொள்ள வேண்டும். இந்த இயந்திரம் மணிக்கு 2 ஆயிரம் லிட்டர் தண்ணீரை சுத்திகரிக்கும் திறன்கொண்டதாக இருக்கும்.
தற்போது சராசரியாக ஒவ்வொரு இடத்திலும் 10 ஆயிரத்து 90 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அதிகபட்சமாக 10-வது மண்டலம் 131-வது வார்டில் உள்ள சிவன் பூங்காவில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் நிலையத்தில் நாளொன்றுக்கு 19 ஆயிரத்து 480 லிட்டர் குடிநீர் வழங்கப்படுகிறது. இதுவரை 6 லட்சத்து 41 ஆயிரம் ஏழை, எளிய குடும்பங்கள் 128 லட்சத்து 27 ஆயிரம் லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை பெற்று பயன்பெற்றுள்ளனர்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT