Published : 03 May 2017 10:51 AM
Last Updated : 03 May 2017 10:51 AM

பாபநாசம் அருகே விவசாயி தற்கொலை

போதிய தண்ணீர் இல்லாமல் நெற்பயிர்கள் கருகியதால் மனமுடைந்த விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே திருக்கருக்காவூர் கரும் பலம் தெற்கு தெருவைச் சோ்ந்த வர் பன்னீர்செல்வம்(49). இவர் தனது வயலில் சுமார் இரண்டரை ஏக்கர் நிலத்தில் நெல் சாகுபடி செய்திருந்தார். இவருக்கு கிணறு, போர்வெல் வசதி இல்லாததால், அருகில் உள்ள பம்புசெட் தண் ணீரை ஒரு மணி நேரத்துக்கு ரூ.100 கொடுத்து நெற்பயிர்களுக்குப் பாய்ச்சி வந்தார்.

அதன்பின், நிலத்தடி நீர்மட்டம் குறைந்ததால், பம்புசெட்டில் இருந்து நெற்பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் போனது. நெல் சாகுபடிக்காக ரூ.50 ஆயிரம் வரை செலவு செய் தும் பலனில்லாததால், பன்னீர் செல்வம் மனமுடைந்த நிலையில் இருந்தார்.

இந்நிலையில், நேற்று வயலுக்குச் சென்ற அவர், கருகிய நெற்பயிர்களைப் பார்த்து மனமுடைந்து, வயலுக்கு தெளிப்பதற்காக வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தைக் குடித்து வயலிலேயே மயங்கி விழுந்தார்.

அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இதுகுறித்து பாபநாசம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x