Published : 05 Jul 2016 07:25 AM
Last Updated : 05 Jul 2016 07:25 AM

அதிமுக மகளிர் அணி ஆலோசனை கூட்டம்: ஜெயலலிதா அறிவிப்பு

அதிமுகவில் வரும் 8-ம் தேதி முதல் ஆகஸ்ட் 23-ம் தேதி வரை உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக மகளிர் அணி ஆலோசனை கூட்டங்கள் மாவட்ட வாரியாக நடக்கும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிவிப்பு:

அதிமுகவின் மகளிர் அணி சார்பில், அரசின் சாதனைகளை பரப்புதல், உள்ளாட்சி அமைப்பு களுக்கான தேர்தல் விரைவில் நடக்க உள்ளதை முன்னிட்டு, மகளிர் அணிகள் ஆற்ற வேண்டிய பணிகள், மகளிர் அணியின் சமுதாய பணிகள், செயல்பாடுகளை ஊக்குவித்தல் மற்றும் உறுப்பினர்கள் சேர்க்கை தொடர்பான ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்படுகிறது.

வரும் 8-ம் தேதி முதல் ஆகஸ்ட் 23-ம் தேதி வரை மாவட்ட வாரியாக கூட்டம் நடக்கிறது. சென்னைக்கான கூட்டம் இம்மாதம் 30-ம் தேதி நடக்கிறது. இக்கூட்டங்கள் மகளிர் அணிச் செயலாளர் விஜிலா சத்தியானந்த் எம்.பி., தலைமையிலும், மகளிர் அணி இணைச் செயலாளர் கீர்த்திகா முனியசாமி உள்ளிட்ட மகளிர் அணி நிர்வாகிகள் முன்னிலையிலும் நடக்கும். ஆலோசனைக் கூட்டங்கள் நடக்கும் மாவட்டங்களைச் சேர்ந்த மகளிர் அணி செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் இந்தக் கூட்டங்களில் பங்கேற்க வேண்டும். இக்கூட்டங்களுக்கு மாவட்ட செயலாளர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x