Published : 15 Mar 2017 09:07 PM
Last Updated : 15 Mar 2017 09:07 PM
வெப்பச் சலனம் காரணமாக தென் தமிழகத்தில் இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் கூறும்போது, ''வெப்பச் சலனம் காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகம் மற்றும் வடக்கு உள் தமிழகத்தில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை ஓரிரு இடங்களில் பெய்யக்கூடும்.
வட கடலோர தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வறண்ட வானிலை நிலவும். சென்னையைப் பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலையாக 34 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்சமாக 27 டிகிரி செல்சியஸ் இருக்கும்.
புதன்கிழமை காலை 8.30 மணி நிலவரப்படி, அதற்கு முந்தைய 24 மணி நேரத்தில் கோத்தரிகியில் 17 செமீ, குன்னூரில் 11 செமீ, சிவகங்கையில் 9 செமீ, தோண்டி, போடிநாயக்கனூர், வேலூர் மாவட்டம் கலவையில் தலா 4 செமீ மழை பதிவாகியுள்ளது.
வெப்பநிலையைப் பொறுத்தவரை, புதன்கிழமை மாலை 5.30 மணி நிலவரப்படி அதிகபட்ச வெப்பநிலையாக கரூர் பரமத்தியில் 38 டிகிரி செல்சியஸ், வேலூரில் 36 டிகிரி செல்சியஸ், சென்னையில் 33 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது'' என்று அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT