Published : 28 Jun 2017 08:35 AM
Last Updated : 28 Jun 2017 08:35 AM
தமாகா தலைவர் ஜி.கே.வாசன் நேற்று வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தில் ஓய்வூதிய உதவித்தொகை திட்டங்களால் மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்ற பெண்கள் உள்ளிட்டோர் பயனடைந்து வருகின்றனர். ஆனால், கடந்த 2013-14ம் நிதியாண்டைவிட, 2016-17ல் இத்திட்டங்களால் பயனடைந் தோர் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. இதற்கு அரசு விளக்கம் அளிக்க வேண்டும்.
மேலும், 2013-14ல் சுமார் ரூ.4,254 கோடி செலவு செய்யப்பட்ட இத்திட்டங்களுக்கு, 2016-17ல் ரூ.3,732 கோடி மட்டுமே செலவிடப்பட்டுள்ளது. இதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். இதுபோன்ற திட்டங்களை தமிழக சமூகநலத் துறை முறையாக செயல்படுத்தாததே இதற்கு காரணம்.
இவ்வாறு அவர் தெரிவித் துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT