Published : 16 Sep 2016 08:52 AM
Last Updated : 16 Sep 2016 08:52 AM

ஆயுர்வேத கல்லூரி மாணவி தற்கொலை

பூந்தமல்லி அருகே உள்ள தனியார் ஆயுர்வேத கல்லூரி மாணவி, அவரது விடுதி அறையில் தற்கொலை செய்துகொண்டார்.

டெல்லியைச் சேர்ந்தவர் சுவாதிக் பாண்டு. இவர், பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டையில் இயங்கி வரும் தனியார் ஆயுர்வேத கல்லூரியில் படித்து வந்தார். கடந்த இரு நாட்களாக கல்லூரிக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. இந்நிலையில் சக மாணவி ஒருவர், நேற்று சுவாதிக் பாண்டு அறைக்கு சென்றுள்ளார். அங்கு அறை கதவு உள் தாழிடப்பட்டு இருந்தது. பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது, சுவாதிக் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டது தெரியவந்தது.

பின்னர் அவரது உடலை மீட்ட நசரத்பேட்டை போலீஸார், பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x