Published : 05 Jun 2017 08:56 AM
Last Updated : 05 Jun 2017 08:56 AM
திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டா லின் விடுத்துள்ள சவாலை பாஜக எதிர்கொள்ளும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் சாதிக் கட்சிகளுக்கு கடந்த காலத் தில் துணைபோன திமுக, சமூகநீதி என்று பேசுவது மக்களை ஏமாற்றும் செயல். சாதிய அடையாளங்க ளோடு ஆங்காங்கே மாவட்டங் களாக, வட்டங்களாக, வேட்பாளர் களாக சாதிவாரி அமைச்சர் களையும், தலைவர்களையும் உருவாக்கியதும் திமுகதான்.
ஸ்டாலின் முதல்வராகி பூரண மதுவிலக்கு கொண்டு வர நிதிஷ்குமார் கோரிக்கை விடுத்துள்ளார். மதுவை கொண்டு வந்ததே திமுகதான் என்ற வரலாறு அவருக்கு தெரியாது.
தேர்தல் வாக்குறுதி எதை யுமே நிறைவேற்றவில்லை என்று கூறியிருக்கிறார்கள். வாக்குறுதி களை நிறைவேற்றியதால்தான் இந்தியா முழுவதும் மற்ற மாநிலங் களில் மக்கள் எங்களுக்கு வாக்கு களை வாரி வழங்குகிறார்கள். வரும் காலத்தில் தமிழக மக்களும் தாமரைக்கு வாக்களிப்பார்கள்.
திமுக தலைவர் கருணாநிதி யின் விழாவில் அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சி களின் தலைவர்கள் பிரதமர் மோடி அரசுக்கு எதிராக அணி திரண்டு பேசியுள்ளனர். அவர்களின் சவாலை பாஜக எதிர்கொள்ளும். வரும் தேர்தலில் சாதனை புரியும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT