Published : 02 Jun 2016 12:02 PM
Last Updated : 02 Jun 2016 12:02 PM

சபாநாயகர், துணை சபாநாயகர் தேர்தலுக்காக வேட்புமனு தாக்கல்

தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் பதவிக்கு ப.தனபால், துணை சபாநாயகர் பதவிக்கு பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

தமிழக சட்டப்பேரவை சபாநாயகர், துணை சபாநாயகர் தேர்தல் நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெறவுள்ள நிலையில், இதற்கான வேட்பு மனுத் தாக்கல் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்றது.

சபாநாயகர் பதவிக்கு ப.தனபால், துணை சபாநாயகர் பதவிக்கு பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

தமிழக சட்டப்பேரவை செயலர் ஜமாலுதீன் முன்னிலையில் அவர்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். தனபாலும், பொள்ளாச்சி ஜெயராமனும் போட்டியின்ற தேர்வாக வாய்ப்புள்ளது. வேட்புமனு தாக்கலின்போது அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோர் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x