Published : 20 Jun 2015 10:42 AM
Last Updated : 20 Jun 2015 10:42 AM
விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகே உள்ள பட்டாசு ஆலையில் நேற்று ஏற்பட்ட வெடி விபத்தில் இரு அறைகள் இடிந்தன.
அன்பின்நகரத்தில் பாண்டியன் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. இந்த ஆலையில் பணி முடிந்து நேற்று அனைவரும் சென்றபின், கட்டிடத்தில் வைக்கப் பட்டி ருந்த பட்டாசுகள் வெடித்துச் சிதறின. இதில் இரு அறைகள் சேதமடைந்தன.
இதுகுறித்து ஏழாயிரம்பண்ணை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT