Published : 11 Apr 2017 07:34 AM
Last Updated : 11 Apr 2017 07:34 AM

வெறிச்சோடிய ஆர்.கே.நகர் தொகுதி: வெளியூர் பிரமுகர்கள் புறப்பட்டதால் நெரிசல் குறைந்தது

ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத் தேர்தல் ரத்து செய்யப்பட்டதால் வெளியூர் பிரமுகர்கள் வெளி யேறிய நிலையில் அந்த தொகு தியே நேற்று வெறிச்சோடி காணப் படுகிறது. இதனால் அங்கு போக்கு வரத்து நெரிசலும் குறைந்து இருந்தது.

ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலையொட்டி, அதிமுகவின் இரு அணிகள், திமுக ஆகிய 3 வேட்பாளர்களுக்கும் ,தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த தொண்டர்கள், தொகுதியில் முகா மிட்டு கடந்த 10 நாட்களாக வாக்கு சேகரித்து வந்தனர். இதனால் அவர்கள் கொண்டு வந்த இருசக்கர மற்றும் 4 சக்கர வாகனங்களால் தொகுதி முழுவதும் காலை மற்றும் மாலை வேளைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. திரும்பும் திசையெல்லாம், சிறு சிறு குழுக்களாக கட்சியினர், கொடியுடன் சென்று, துண்டு பிரசுரங்களை வீடு வீடாகச் சென்று விநியோகித்தனர். பல்வேறு வகை மேள தாளங்களின் ஒலி, வெடிச் சத்தத்தால், தொகுதியே அமர்க்களப்பட்டது.

இந்நிலையில் தொகுதியில் நடைபெற்ற பண பட்டுவாடா காரணமாக இடைத்தேர்தலை, இந்திய தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது. இதனால் தொகு தியில் முகாமிட்டிருந்த அனைத்து கட்சிகளின் வெளியூர் பிரமுகர்க ளும் வெளியேறிவிட்டனர். தெரு வோர பெட்டிக் கடைகள், முக்கிய சாலைகள், சிறு சிறு தெருக்கள் அனைத்தும் கட்சியினர் கூட்டத்தை காண முடியவில்லை. வாகன போக்குவரத்தும் குறைவாக இருந்தது.. இதனால் அந்த தொகுதி போக்குவரத்து நெரிசல் இன்றி நேற்று வெறிச்சோடி காணப்பட்டது. வெடிச் சத்தமோ, மேளச் சத்தமோ, பிரச்சார ஒலிப்பெருக்கி ஓசையோ இன்றி தொகுதியே அமைதியாக இருந்தது.

தண்டையார்பேட்டையில் உள்ள தேர்தல் நடத்தும் அலு வலர் அலுவலகம் பூட்டப்பட்டிருந் தது. அங்கு அதிக எண்ணிக்கை யில் பாதுகாப்புக்காக நிறுத்தப் பட்டிருந்த போலீஸாரும் குறைக் கப்பட்டிருந்தனர். தண்டையார் பேட்டை காமராஜர் நகர் நடு நிலைப் பள்ளியில் தயார் நிலை யில் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், வாக்குப் பதிவு உபகரணங்கள் அனைத்தும் நேற்று, அதே பள்ளி யில் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப் படை பாதுகாப்பில் இருந்தன. வாகன சோதனைக்காக ஆங்காங்க நிறுத்தப்பட்ட, மாநகர போலீஸார் மற்றும் துணை ராணுவப் படையினர், திரும்ப அழைக்கும் உத்தரவு வராததால் அதே இடத்திலேயே ஓய்வு எடுத்துக்கொண்டு இருந்தனர். மீதம் உள்ள வாக்காளர் சீட்டுகள் விநியோகமும் நிறுத்தப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x