Published : 10 Jun 2017 09:29 AM
Last Updated : 10 Jun 2017 09:29 AM
திருவாரூர் மாவட்டம் மன்னார் குடி காவல் நிலையத்தில் குற்றப் பிரிவு சிறப்பு உதவி ஆய்வாள ராகப் பணியாற்றி வருபவர் சதா சிவம்(54). இவர் மன்னார்குடி ராமானுஜர் தெருவில் வசித்து வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு சதாசிவம் வீட்டு வாசலில் பயங்கர சப்தம் கேட்டது. எழுந்து வந்த சதாசிவம், கதவைத் திறந்து பார்த்தபோது, வீட்டு வாசலில் தீப்பற்றி எரிவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக தண்ணீரை ஊற்றித் தீயை அணைத்துவிட்டுப் பார்த்த போது, மர்ம நபர்கள் பெட் ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தியிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT