Published : 11 Sep 2018 08:12 AM
Last Updated : 11 Sep 2018 08:12 AM
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வுக்கு சட்டப்படி வாரிசுகள் இருக்கிறார்களா, அவர் உயில் எழுதி வைத்துள்ளாரா என்பது குறித்து வருமானவரித் துறை பதில் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள் ளது.
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 1997-98 காலகட்டத் தில் தனது சொத்துகளுக்கான செல்வ வரி கணக்கை முறையாக தாக்கல் செய்யவில்லை என்று வருமானவரித் துறை குற்றம் சாட்டியது.
வருமானவரித் துறை மதிப்பீடு
கடந்த 2000-ம் ஆண்டு ஜெயலலிதாவுக்கு ரூ.4.67 கோடி மதிப்பில் சொத்துகள் இருப்பதாக வருமானவரித் துறை முதலில் மதிப்பீடு செய்தது.
ஆனால் லஞ்ச ஒழிப்புத் துறை யினர் தாக்கல் செய்த அறிக்கை யின்படி, ஜெயலலிதாவுக்கு சொந்தமான ரூ.3.83 கோடி மதிப் புள்ள தங்க, வெள்ளி நகைகள், போயஸ் தோட்டம் இல்லத்தில் ரூ.58.52 லட்சம் மதிப்பிலான கூடுதல் கட்டிடம், ஹைதராபாத் தோட்டத்தில் ரூ.11.72 லட்சத்தில் கட்டப்பட்ட பண்ணை வீடு, வாகனங்கள் ஆகியவற்றின் மதிப்பு களை அவர் சொத்துக் கணக்கில் காட்டவில்லை என்று கூறி, செல்வவரி ஆணையர் திருத்திய மதிப்பீடு தயார் செய்து, செல்வ வரியை செலுத்த உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து வருமானவரித் துறையின் மேல்முறையீட்டு தீர்ப் பாயத்தில் 6 ஆண்டுகள் கழித்து ஜெயலலிதா மனு தாக்கல் செய் தார்.
இதை ஏற்றுக்கொண்ட தீர்ப்பா யம், இதுதொடர்பாக செல்வ வரி ஆணையர் பிறப்பித்த திருத்திய மதிப்பீட்டை ரத்து செய்தது. தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து வருமானவரித் துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
நீதிபதிகள் ஹூலுவாடி ஜி.ரமேஷ், கே.கல்யாணசுந்தரம் அமர்வு இந்த வழக்கை விசா ரித்தது.
26-ம் தேதிக்கு தள்ளிவைப்பு
‘‘ஜெயலலிதாவுக்கு சட்டப்படி யான வாரிசுகள் யாரும் உள்ள னரா? அல்லது அவர் தனது சொத்துகள் தொடர்பாக உயில் எதுவும் எழுதி வைத்துள்ளாரா என்பது குறித்து வருமானவரித் துறை பதில் அளிக்க வேண்டும்’’ என்று உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை வரும் 26-ம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT