Last Updated : 20 Mar, 2018 02:38 PM

 

Published : 20 Mar 2018 02:38 PM
Last Updated : 20 Mar 2018 02:38 PM

ஆன்மிகப் பயணம் முடிந்து சென்னை திரும்பினார் ரஜினிகாந்த்

10 நாட்கள் ஆன்மிகப் பயணம் சென்ற ரஜினிகாந்த், இன்று மதியம் 2 மணிக்கு சென்னை திரும்பினார்.

இமயமலை, தர்மசாலா, ரிஷிகேஷ் உள்ளிட்ட இடங்களுக்கு 10 நாட்கள் ஆன்மிகப் பயணம் சென்றார் ரஜினிகாந்த். கடந்த 10 ஆம் தேதி சென்னையில் இருந்து புறப்பட்டு விமானம் மூலம் சிம்லாவுக்குச் சென்றவர், அங்கிருந்து ரயில் மற்றும் கார் மூலம் மற்ற இடங்களுக்குப் பயணித்தார். மேலும், மலைப்பாதையில் நடைபயணமும் சென்றார்.

இந்நிலையில், 10 நாட்களுக்குப் பிறகு இன்று மதியம் 2 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடைந்தார்.

ரஜினி மக்கள் மன்றத்திற்கு, மாவட்ட வாரியாக நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களில் முக்கிய நிர்வாகிகளுடன் விரைவில் ஆலோசனை நடத்த இருக்கும் ரஜினிகாந்த், அதன்பிறகு வழக்கமாக செய்து கொள்ளும் உடல் பரிசோதனைக்காக அமெரிக்கா புறப்பட்டுச் செல்கிறார்.

இதற்கிடையில், ஏப்ரல் 14 ஆம் தேதி தன்னுடைய கட்சிப் பெயரையும் கொடியையும் அறிவிக்க இருக்கிறார் ரஜினிகாந்த் என்றொரு தகவல் உலவி வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x