Published : 12 Sep 2014 01:58 PM
Last Updated : 12 Sep 2014 01:58 PM

கூடா நட்புக்காக கணவன், குழந்தையை கொன்ற பெண் கைது: காதலன் உட்பட 3 பேரும் சிக்கினர்

விழுப்புரம் அருகே கோலியனூர் கூட்டுரோடில் வசிப்பர் சுரேஷ். இவரும் அம்சா என்கிற மீனாட்சியும் திருமணம் செய்துகொள்ளாமல் தம்பதிபோல வாழ்ந்துவந்தனர். வியாழக்கிழமை காலை சுரேஷும், மீனாட்சியும் 4 வயதான தாமரைச் செல்வனை அடித்து சித்திரவதை செய்துள்ளனர். இதைகண்ட அக்கம் பக்கத்தினர் வளவனூர் போலீஸாருக்கு தகவல் அளித்தனர்.

உடனடியாக போலீஸார் சிறுவன் தாமரைச் செல்வனை மீட்டு மீனாட்சியிடமும், சுரேஷிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தினர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறும்போது: திண்டிவனம் அருகே தீவனூரைச் சேர்ந்தவர் சிவா(45). முதல் மனைவி இறந்துவிட்டதால் இரண்டாவதாக அம்சா என்கிற மீனாட்சியை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு தாமரைச் செல்வன், பால சூர்யா என்கிற இரண்டு குழந்தைகள் உள்ளனர். கடந்த 2014ம் ஆண்டு பிப்ரவரி மாதம் விபத்து ஒன்றில் சிவா உயிரிழந்தார். அதன்பின் கோலியனூரில் குடியேறிய மீனாட்சி சிவாவின் உறவினர் சுரேஷுடன் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வந்துள்ளார்.

இவர்களுக்குள் ஏற்கெனவே கூடா நட்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. மீனாட்சியின் ஆலோசனையின்படி சுரேஷ் தன் நண்பர்களான நடுவனந்தல் கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன், பரசுராமன் ஆகியோர் உதவியுடன் சிவாவை வேன் ஏற்றி கொன்று விபத்துபோல நாடகமாடியதும், சுரேஷுடன் மீனாட்சி நெருக்கமாக இருந்தபோது இடைஞ்சலாக இருந்த சிறுவன் பாலசூர்யாவை சுவற்றில் அடித்து கொன்று, தவறி விழுந்து இறந்ததாக நம்பவைத்ததும் அம்பலமாகியுள்ளது. தற்போது மற்றொரு குழந்தையையும் கொலை செய்யும் நோக்கில் இவர்கள் செயல்பட்ட நிலையில் போலீஸாரிடம் சிக்கியுள்ளனர்.

இந்த கொலை தொடர்பாக ரோஷணை போலீஸார் வழக்கு பதிவு செய்து மீனாட்சி, சுரேஷ் மற்றும் மணிகண்டன், பரசுராமன் ஆகிய 4 பேரை கைது செய்தனர். இவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x