Published : 03 Feb 2019 06:15 PM
Last Updated : 03 Feb 2019 06:15 PM
தமிழக அரசியலில் மு.க.ஸ்டாலின், தினகரன் போன்ற சின்னத்தம்பிகள் நிறைய பேர் இருக்கின்றனர். ஆனால் 2 சின்னத்தம்பிகளும் ஆட்சியமைப்பது என்பது நடக்காத காரியம் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று (ஞாயிறு) செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், “கூட்டணி, தேர்தல் விவகாரத்தில் லேட்டாக வந்தாலும் லேட்டஸ்ட்டாக வருவதுதான் அதிமுக. தேர்தல் பணிகள் அதிவிரைவில் நடைபெற்று வருகின்றன.
அரசியலில் மு.க.ஸ்டாலின், தினகரன் போன்ற சின்னத்தம்பிகள் இருக்கின்றனர். அரசியலில் இந்த 2 சின்னத்தம்பிகளும் ஆட்சியமைக்க முயற்சிப்பது நடக்காது” என்று தெரிவித்தார்.
மேலும் சில பழமொழிகளையும் ஜெயக்குமார் உதிர்த்தார்: “கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவர்கள் வானம் ஏறி வைகுண்டம் பார்த்தார்களாம்” “எடுப்பது பிச்சை ஏற நினைப்பது பல்லக்கு” என்று எதிர்க்கட்சிகளை விமர்சித்தவர், பிறகு அதிமுக மீது கூறப்படும் குறைகள் பற்றி இன்னொரு பழமொழியை அவிழ்த்துவிடும்போது, “காய்த்த மரம்தான் கல்லடி படும்” என்று கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT