Published : 18 Feb 2019 04:49 PM
Last Updated : 18 Feb 2019 04:49 PM

பதவிக்காக யாருடன் வேண்டுமானாலும் திமுக கூட்டணி வைக்கும்: அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சனம்

கருணாநிதி முதல் ஸ்டாலின் வரை திமுக எந்த ஒரு கொள்கைப்பிடிப்புடனும் கூட்டணி அமைப்பது கிடையாது என்று தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சனம் செய்துள்ளார்.

 

மதுரை திருப்பரங்குன்றத்திலி வாக்குசாவடி கமிட்டி நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை நடத்திய பிறகு செய்தியாளர்களிடம் பேசிய போது,

 

திமுக என்ற கட்சியானது கொள்கை பிடிப்புடன் கூட்டணி அமைப்பது கிடையாது. அவர்களைப் பொறுத்த அளவில் யாரையாவது பிடித்து பதவிக்கு வரவேண்டும் என்ற நோக்கம் உடையவர்கள்.

 

“டாக்டர் கலைஞர் கருணாநிதி இருக்கும்போதும் அதேதான், இப்போது ஸ்டாலின் இருக்கும் போதும் அதே நிலைப்பாட்டைத்தான் கடைபிடிக்கிறார்கள்.  ஆனால் நாங்கள் தனித்தும் நின்றுள்ளோம். நாங்கள் தமிழ்நாட்டு மக்களின் தேவைக்காக கூட்டணி வைப்போம். மக்களின் உரிமைக்காகக் குரல் கொடுப்போம். எங்கள் தமிழகத்தின் உரிமைக்காக குரல் கொடுப்போம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x