Published : 26 Sep 2014 09:11 AM
Last Updated : 26 Sep 2014 09:11 AM
புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையின் பொன்விழாவில் பங்கேற்பதற்காக குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இன்று (வெள்ளிக்கிழமை) புதுவை வருகிறார். இந்த விழாவில் மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷவர்த்தன், சுகாதாரத் துறை செயலர் அலோக் வர்மா, ஜிப்மர் தலைவர் எம்.கே.பான் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். இந்த விழாவில் பங்கேற்பதற்காக டெல்லியில் இருந்து இன்று நண்பகல் 12 மணிக்கு தனி விமானத்தில் பிரணாப் முகர்ஜி புறப்பட்டு சென்னை வருகிறார். பின்னர், அங்கிருந்து புதுவை விமான நிலையத்துக்கு பிற்பகல் 2.45 மணிக்கு வருகிறார். அவரை, புதுச்சேரி ஆளுநர் ஏ.கே.சிங், முதல்வர் என்.ரங்கசாமி ஆகியோர் வரவேற்கின்றனர்
பின்னர், அங்கிருந்து கார் மூலம் ஜிப்மர் மருத்துவமனைக்கு பிரணாப் முகர்ஜி செல்கிறார். அங்கு பொன்விழாவில் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார். விழா முடிந்ததும் மாலை 4 மணிக்கு சென்னை வழியாக டெல்லிக்கு புறப்படுகிறார். பிரணாப் முகர்ஜி வருகையை முன்னிட்டு 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அவர் செல்லும் சாலைகள் அனைத்தும் போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. டெல்லி சிறப்பு பாதுகாப்பு படையினரும் புதுவையில் முகாமிட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT