Published : 17 Jan 2019 09:46 AM
Last Updated : 17 Jan 2019 09:46 AM

மதுக்கடைகளை எப்போது மூடப்போகிறோம்?- திருவள்ளுவர் திருநாள் விழாவில் வைரமுத்து கேள்வி

மதுக்கடைகளை எப்போது மூடப் போகிறோம் என்று கவிஞர் வைரமுத்து கேள்வி எழுப்பி யுள்ளார்.

வெற்றித் தமிழர் பேரவை சார்பில் சென்னை பெசன்ட் நகர் மாநகராட்சிப் பூங்காவில் திருவள்ளுவர் திருநாள் கொண் டாடப்பட்டது. கவிஞர் வைரமுத்து இதில் பங்கேற்று திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

சென்னைப் பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணை வேந்தரும் அமெட் பல்கலைக் கழகத்தின் இந்நாள் துணை வேந்தருமான திருவாசகம், தொழிலதிபர் சிங்காரம், வெற்றித் தமிழர் பேரவையின் சென்னை மாநகரச் செயலாளர் வி.பி.குமார் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தி யாளர்களிடம் வைரமுத்து கூறிய தாவது:

திருக்குறள் படைத்த புலவர் என்று மட்டும் திருவள்ளுவரைக் கருதிவிடமுடியாது. அவர் ஒரு புரட்சியாளர். ‘கள்ளுண்ணாமை’ என்ற அதிகாரம் எழுதி மதுவுக்கு எதிராக முதல் கலகக்குரல் எழுப்பி யவர் திருவள்ளுவர். “புலால் உண்ணாமை” என்ற அதிகாரம் எழுதிய திருவள்ளுவருக்காக இறைச்சிக்கடைகளை ஒருநாள் மூடுகிற முடிவெடுக்கிற நாம், கள்ளுண்ணாமை அதிகாரம் எழுதிய திருவள்ளுவருக்காக மதுக்கடைகளை எப்போது நிரந்தரமாக மூடப்போகிறோம்?

2018-19-ம் நிதியாண்டில் தமிழக அரசுக்கு 1,76,251 கோடி வருமானம் கிட்டும் என்று அறியப் படுகிறது. இதில் மதுக்கடைகளால் பெறப்படும் வருமானம் மட்டும் தோராயமாக 20,000 கோடி என்று குறிக்கப்படுகிறது. மதுவால் 20,000 கோடி ஈட்டுகிற அரசு 20 சதவிகித மக்களை அதனால் பாழ்படுத்துகிறது.

இன்றைய கிராமத்தில் சென்று பார்த்தால் 50 வயதுக்கு மேற்பட்ட வர்கள் அருகிப்போனார்கள், நரைத்த தலைகளைப் பார்க்க முடியவில்லை ஊருக்கு வழி காட்டும் கிழவர்கள் அதிகம் இல்லை.

15 வயதில் குடிக்கத் தொடங்கி யவர்கள் 50 வயதுக்குள் அடிமை யாகிப் போகிறார்கள். தமிழர் களைக் கொன்றுவிட்டு எப்படித் தமிழ்நாட்டை வாழவைக்கப் போகி றோம்? தமிழகத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கொல்லுகிற இந்த மதுவை ஒரே நாளில் ஒழிக்க முடியாவிட்டாலும் படிப்படியாக ஒழிப்பதற்கு அடிப்படைத் திட்டங் களை உருவாக்க வேண்டும். இவ்வாறு வைரமுத்து கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x